ஆக, அவர்கள் அவரிடம் நுழைந்தபோது கூறினார்கள்: “அதிபரே! எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் வறுமை ஏற்பட்டுள்ளது. ஓர் அற்பப் பொருளை (கிரயமாக இங்கே) நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். ஆகவே, (அதை ஏற்றுக் கொண்டு) எங்களுக்கு (தானியத்தின்) அளவையை முழுமைப்படுத்தி தருவீராக! இன்னும், எங்களுக்கு தர்மம் வழங்குவீராக! நிச்சயமாக அல்லாஹ் தர்மம் செய்வோருக்கு (தகுந்த) கூலி கொடுப்பான்.”