Quran Quote  :  Never did Allah take unto Himself any son, nor is there any god other than He. -

Surah Englsh Translation, Transliteration Tafsir [131-140]

Read More
Read Less
 

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

 

??????? ??? ????? ????? ???????? ???????? ????????? ???????? ??????????? ??????????

அதற்குக் காரணமாவது, நகரங்களை, - அங்கு வசிப்பவர்கள் கவனமற்றவர்களாக இருக்கும் நிலையில் (அவர்களுடைய ஷிர்க் எனும்) - அநியாயத்தினால் உமது இறைவன் அழிப்பவனாக இல்லை.

????????? ????????? ??????? ?????????? ????? ??????? ????????? ?????? ???????????

இன்னும், எல்லோருக்கும் அவர்கள் செய்ததற்கு ஏற்ப (தகுந்த) பதவிகள் உண்டு. அவர்கள் செய்வதை உம் இறைவன் கவனிக்காதவனாக இல்லை.

????????? ?????????? ??? ???????????? ??? ?????? ???????????? ?????????????? ???? ????????? ???? ???????? ?????? ?????????? ???? ?????????? ?????? ??????????

இன்னும், (நபியே!) உம் இறைவன் நிறைவானவன் (-எத்தேவையுமற்றவன்), கருணையுடையவன் ஆவான். (மனிதர்களே!) அவன் நாடினால் உங்களைப் போக்கி, (சென்றுபோன) மற்ற சமுதாயத்தின் சந்ததியிலிருந்து உங்களை உருவாக்கியதைப் போன்று உங்களுக்குப் பின்னர் அவன் தான் நாடியவர்களை உருவாக்குவான்.

????? ??? ?????????? ??????? ?????? ?????? ?????????????

நிச்சயமாக எதை நீங்கள் வாக்களிக்கப்படுகிறீர்களோ அது வரக்கூடியதே. இன்னும், நீங்கள் (உங்கள் இறைவனைப்) பலவீனப்படுத்துபவர்களாக இல்லை. (அவனை விட்டும் நீங்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது.)

???? ????????? ?????????? ?????? ????????????? ?????? ???????? ???????? ??????????? ??? ??????? ????? ????????? ????????? ???????? ??? ???????? ??????????????

(நபியே!) கூறுவீராக: “என் சமுதாயமே! உங்கள் போக்கில் (நீங்கள் விரும்புவதை) செய்யுங்கள். நிச்சயமாக நான் (என் இறைவனின் கட்டளைப்படி அவன் ஏவியதை) செய்கிறேன். ஆக, மறுமையின் (நல்ல) முடிவு எவருக்கு இருக்கும் என்பதை (நீங்கள் விரைவில்) அறிவீர்கள். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.’’

??????????? ??????? ?????? ?????? ???? ????????? ?????????????? ???????? ?????????? ?????? ??????? ???????????? ???????? ???????????????? ????? ????? ???????????????? ????? ?????? ????? ???????? ????? ????? ??????? ?????? ?????? ?????? ??????????????? ?????? ??? ???????????

இன்னும், அல்லாஹ்விற்கு, - அவன் படைத்த விவசாயத்திலிருந்தும் கால்நடைகளிலிருந்தும் ஒரு பாகத்தை ஆக்கினார்கள். ஆக, தங்கள் கற்பனை எண்ணத்தின்படி, “இது அல்லாஹ்விற்கு என்றும், இன்னும், இது எங்கள் தெய்வங்களுக்கு’’ என்றும் கூறினர். ஆக, எது அவர்களுடைய தெய்வங்களுக்குரியதோ அது அல்லாஹ்வின் (-அல்லாஹ்வுடைய பங்கின்) பக்கம் சேராது. ஆனால், எது அல்லாஹ்விற்குரியதோ அது அவர்களுடைய தெய்வங்களின் (பங்கின்) பக்கம் சேரும்! அவர்கள் (இவ்வாறு) செய்யும் தீர்ப்பு மிகக் கெட்டதாகும்.

??????????? ??????? ????????? ????? ?????????????? ?????? ????????????? ?????????????? ????????????? ??????????????? ?????????? ?????????? ?????? ?????? ??????? ??? ?????????? ?????????? ????? ???????????

இவ்வாறே, இணைவைப்பவர்களில் அதிகமானோருக்கு அவர்களை அழிப்பதற்காகவும் அவர்கள் மீது அவர்களுடைய வணக்க வழிபாட்டை குழப்புவதற்காகவும் அவர்களின் குழந்தைகளைக் கொல்வதை அவர்களுடைய ஷைத்தான்கள் அலங்கரித்தன. அல்லாஹ் நாடியிருந்தால் அதை செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) அவர்களை அவர்கள் பொய்யாக புனைந்து பேசுவதுடன் விட்டுவிடுங்கள்.

?????????? ????????? ????????? ???????? ?????? ???? ???????????? ?????? ??? ????????? ???????????? ??????????? ????????? ?????????? ??????????? ???? ??????????? ????? ??????? ????????? ??????????? ????????? ???????????? ????? ???????? ???????????

இன்னும், “இவை (சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட, மனிதர்கள் புசிப்பதற்கு) தடுக்கப்பட்ட கால்நடைகளும் விவசாயமும் ஆகும். நாங்கள் நாடுபவரைத் தவிர (யாரும்) அவற்றைப் புசிக்கமாட்டார்” என்று தங்கள் கற்பனை எண்ணத்தின் படி அவர்கள் கூறினர். இன்னும், பல கால்நடைகள் இருக்கின்றன. அவற்றின் முதுகுகள் தடுக்கப்பட்டன. (-அவற்றின் மீது பயணிப்பதும், சுமையேற்றுவதும் கூடாது.) இன்னும், (பல) கால்நடைகள் இருக்கின்றன. (அவற்றை அறுக்கும்போது) அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டார்கள், (ஆனால், இவ்வாறுதான் அல்லாஹ் கூறினான் என்று) அவன் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறார்கள். அவர்கள் (அல்லாஹ்வின் மீது) பொய்யை இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததால் அவர்களுக்கு (தகுந்த) கூலி கொடுப்பான்.

?????????? ??? ??? ??????? ??????? ???????????? ????????? ????????????? ??????????? ??????? ????????????? ????? ????? ????????? ?????? ????? ??????????? ????????????? ??????????? ???????? ??????? ???????

இன்னும், “இந்த கால்நடைகளின் வயிறுகளில் இருப்பது எங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியது. (அதை அவர்கள் புசிக்கலாம். அது) எங்கள் பெண்களுக்கு தடுக்கப்பட்டது. அது செத்ததாக இருந்தால் அதில் அவர்களும் பங்காளிகள் (-எங்கள் பெண்களும் அதை சாப்பிடலாம்)’’ என்று கூறினர். அவர்களுடைய (இவ்)வர்ணிப்பிற்கு அவன் அவர்களுக்கு(த் தகுந்த) கூலி கொடுப்பான். நிச்சயமாக அவன் மகா ஞானவான், நன்கறிந்தவன் ஆவான்.

???? ?????? ????????? ?????????? ????????????? ???????? ???????? ?????? ???????????? ??? ?????????? ??????? ??????????? ????? ???????? ???? ???????? ????? ???????? ???????????

அறிவின்றி (அபத்தமாக) முட்டாள்தனமாக தங்கள் பிள்ளைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ் (அனுமதி) கொடுத்த (நல்ல)வற்றை (தங்கள் மீது) தடுத்தவர்களும் திட்டமாக நஷ்டமடைந்து விட்டனர். (இவ்வாறு) அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுகிறார்கள். (அவர்கள்) திட்டமாக வழிகெட்டு விட்டனர். இன்னும், அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை.

Surah tamil Translation and Transliteration

In Surah you can read the translation of Ahmad Raza Khan who was a renowned scholar of the Islamic world and his translation book is known as Kanzul Imaan. You can read the transliteration of Surah which will help you to understand how to read the Arabic text. Apart from that, we have included a Word-By-Word tamil Translation of the Arabic text of Surah .

Surah tamil Tafsir/Tafseer (Commentry)

In Surah we have included two Tafseer (Commentary) in tamil. The first one is from Mufti Ahmad Yaar Khan who was a well-known scholar. In this tafsir, we have also included the most popular Tafsir Ibn-Kathir which is the most comprehensive tafsir available in the world. You can read both or any one of your choice.

Sign up for Newsletter