بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
????????? ???? ????????? ?????????? ??? ???????????? ?????? ????????? ?????? ????? ???? ???????? ??????? ????? ??????? ???????????? ??????????
இன்னும், (நபியே!) “(மறுமையில்) தங்கள் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவோம், அங்கு தங்களுக்கு அவனைத் தவிர பாதுகாவலரும் இல்லை பரிந்துரைப்பவரும் இல்லை’’ என்று பயப்படுபவர்களை இதன் மூலம் எச்சரிப்பீராக, அவர்கள் (அதிகமதிகம்) அல்லாஹ்வை அஞ்சுவதற்காக(வும் பாவங்களை விட்டு விலகுவதற்காகவும்).
????? ???????? ????????? ????????? ???????? ????????????? ???????????? ?????????? ?????????? ??? ???????? ???? ?????????? ???? ?????? ????? ???? ????????? ????????? ???? ?????? ?????????????? ????????? ???? ??????????????
இன்னும், (நபியே!) தங்கள் இறைவனை - அவனின் முகத்தை நாடியவர்களாக - காலையிலும் மாலையிலும் பிரார்த்திப்பவர்களை (உங்கள் சபையிலிருந்து) விரட்டாதீர்! (அப்படி நீர் விரட்டினால்) அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்! நீர் அவர்களை விரட்டுவதற்கு அவர்களின் கணக்கிலிருந்து எதுவும் உம் மீதில்லையே. உம் கணக்கிலிருந்து எதுவும் அவர்கள் மீதில்லையே. (உமது செயல்களைப் பற்றி அவர்கள் விசாரிக்கப்பட மாட்டார்கள். அவர்களின் செயல்களைப் பற்றி நீர் விசாரிக்கப்பட மாட்டீர்.)
??????????? ???????? ????????? ???????? ?????????????? ??????????????? ????? ??????? ????????? ????? ??????????? ???????? ??????? ?????????? ????????????????
இவ்வாறே, அவர்களில் சிலரை சிலர் மூலம் சோதித்தோம். இறுதியில், “எங்களுக்கு மத்தியிலிருந்து (நம்பிக்கை கொண்ட) இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்தான்?’’ என்று அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) கூறுகிறார்கள். நன்றியுள்ளவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா?
??????? ???????? ????????? ??????????? ?????????????? ?????? ??????? ??????????? ?????? ????????? ?????? ???????? ??????????? ???????? ???? ?????? ??????? ???????? ??????????? ????? ????? ???? ????????? ?????????? ?????????? ??????? ????????
இன்னும், (நபியே!) நம் வசனங்களை நம்பிக்கை கொள்பவர்கள் உம்மிடம் வந்தால் (அவர்களுக்கு நீர்) கூறுவீராக: “உங்களுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக! உங்கள் இறைவன் கருணையை தன்மீது கடமையாக்கினான். நிச்சயமாக உங்களில் எவர் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து, பிறகு, அதன் பின்னர் (அதிலிருந்து திருந்தி அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி, (தன்னை) சீர்திருத்துவாரோ, (அவரை அல்லாஹ் மன்னிப்பான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.’’
??????????? ????????? ?????????? ??????????????? ??????? ??????????????
இவ்வாறுதான், (சத்தியம் தெளிவாகுவதற்காகவும்,) குற்றவாளிகளின் வழி தெளிவாகுவதற்காகவும் (நமது) வசனங்களை விவரிக்கிறோம்.
???? ?????? ??????? ???? ???????? ????????? ????????? ??? ????? ???????? ??? ????? ????????? ?????????????? ???? ???????? ????? ?????? ?????? ???? ??????????????
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் பிரார்த்திப்பவற்றை நான் வணங்குவதற்கு நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன்.” (நபியே!) கூறுவீராக: “நான் உங்கள் ஆசைகளை பின்பற்றமாட்டேன். அவ்வாறாயின், நான் வழிதவறிவிடுவேன். இன்னும், நேர்வழி பெற்றவர்களில் நான் இருக்க மாட்டேன்.’’
???? ?????? ?????? ????????? ???? ??????? ???????????? ?????? ??? ?????? ??? ??????????????? ??????? ???? ????????? ?????? ???????? ??????? ????????? ?????? ?????? ?????????????
(நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக நான் என் இறைவனின் (தெளிவான) ஓர் அத்தாட்சியின் மீதிருக்கிறேன். அவனை (நீங்கள்) பொய்ப்பித்தீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. (எவருக்கும்) அதிகாரம் இல்லை அல்லாஹ்வுக்கே தவிர. (அவன்) உண்மையை விவரிக்கிறான். இன்னும், தீர்ப்பாளர்களில் அவன் மிக மேலானவன்.’’
??? ????? ????? ?????? ??? ??????????????? ????? ???????? ????????? ??????? ????????????? ????????? ???????? ????????????????
கூறுவீராக: “நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால், எனக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் காரியம் முடிக்கப்பட்டிருக்கும். அல்லாஹ், அநியாயக்காரர்களை மிக அறிந்தவன்.’’
??????????? ????????? ????????? ??? ???????????? ?????? ????? ?????????? ??? ??? ???????? ???????????? ????? ???????? ??? ???????? ?????? ??????????? ????? ??????? ??? ????????? ????????? ????? ?????? ????? ??????? ?????? ??? ??????? ????????
இன்னும், மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்றை அவனைத் தவிர (யாரும்) அறிய மாட்டார். நிலத்திலும், நீரிலும் உள்ளவற்றை (அவன்) நன்கறிவான். இன்னும், ஓர் இலையும் விழுவதில்லை அதை அவன் அறிந்தே தவிர. பூமியின் (ஆழ்) இருள்களில் உள்ள வித்து, பசுமையானது, உலர்ந்தது ஆகிய எதுவுமில்லை - தெளிவான புத்தகத்தில் (அவை எழுதப்பட்டு) இருந்தே தவிர.
?????? ??????? ?????????????? ?????????? ?????????? ??? ????????? ???????????? ????? ???????????? ????? ??????????? ?????? ?????????? ????? ???????? ???????????? ????? ???????????? ????? ??????? ???????????
இன்னும், இரவில் அவன்தான் உங்க(ள் உயிர்க)ளை கைப்பற்றுகிறான். இன்னும், நீங்கள் பகலில் செய்தவற்றை அவன் அறிகிறான். பிறகு, குறிப்பிட்ட தவணை (முழுமையாக) முடிக்கப்படுவதற்காக அதில் (-காலையில்) உங்களை அவன் எழுப்புகிறான். பிறகு, அவன் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. பிறகு, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.