بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
???????? ??????????? ????????? ???????? ?????????? ???????? ??????? ????????? ??????????? ????? ????????? ????????? ?????? ?????? ?????? ??????? ????????????
இன்னும், நீங்களோ உங்களுக்கு அல்லாஹ்வின் வசனங்கள் ஓதி காண்பிக்கப்பட, உங்களுடன் அவனுடைய தூதரும் இருக்க, நீங்கள் எவ்வாறு அல்லாஹ்வை நிராகரிப்பீர்கள்? எவர் அல்லாஹ்வைப் பலமாகப் பற்றிக்கொள்கிறாரோ (அவர்) திட்டமாக நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டப்படுவார்.
????????????? ????????? ?????????? ????????? ??????? ????? ?????????? ????? ?????????? ?????? ???????? ????????????
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை - அவனை அஞ்சவேண்டிய உண்மையான முறையில் - அஞ்சுங்கள். இன்னும், நீங்கள் முஸ்லிம்களாக இருந்தே தவிர இறந்து விடாதீர்கள்.
?????????????? ???????? ??????? ???????? ????? ????????????? ???????????? ???????? ??????? ?????????? ???? ??????? ?????????? ????????? ?????? ??????????? ????????????? ?????????????? ?????????? ????????? ?????? ????? ???????? ????? ???????? ???????????? ????????? ????????? ????????? ??????? ?????? ??????????? ??????????? ???????????
இன்னும், அனைவரும் அல்லாஹ்வின் (வேதம் எனும்) கயிற்றைப் பற்றிப் பிடியுங்கள்; இன்னும், பிரிந்து விடாதீர்கள்; இன்னும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவு கூருங்கள். நீங்கள் எதிரிகளாக இருந்தபோது உங்கள் உள்ளங்களுக்கிடையில் (இஸ்லாமின் மூலம்) அல்லாஹ் இணக்கத்தை ஏற்படுத்தினான். ஆகவே, அவனுடைய அருட்கொடையால் நீங்கள் சகோதரர்களாக ஆகிவிட்டீர்கள். (அதற்கு முன்னர்) நரகக் குழியின் ஓரத்தில் இருந்தீர்கள். ஆக, அதிலிருந்து உங்களை அவன் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
????????? ???????? ??????? ????????? ????? ????????? ????????????? ?????????????? ???????????? ???? ??????????? ??????????????? ???? ??????????????
சிறந்ததின் பக்கம் அழைக்கின்ற, நன்மையை ஏவுகின்ற, பாவத்திலிருந்து தடுக்கின்ற ஒரு குழு உங்களில் இருக்கட்டும். இன்னும், அவர்கள்தான் வெற்றியாளர்கள்.
????? ?????????? ??????????? ???????????? ?????????????? ???? ?????? ??? ?????????? ?????????????? ??????????????? ?????? ??????? ???????
இன்னும், (நம்பிக்கையாளர்களே!) எவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னர் (தங்களுக்குள் பல மாறுபட்ட கொள்கை உடைய பிரிவுகளாக) பிரிந்து, கருத்து வேறுபாடு கொண்டார்களோ அவர்களைப் போல் நீங்கள் ஆகிவிடாதீர்கள். இன்னும், அவர்களுக்கு பெரிய தண்டனை உண்டு.
?????? ????????? ??????? ??????????? ???????? ???????? ????????? ?????????? ??????????? ??????????? ?????? ???????????? ?????????? ?????????? ????? ??????? ???????????
(சில) முகங்கள் வெண்மையாகின்ற, (சில) முகங்கள் கருக்கின்ற நாளில் (அந்த தண்டனையை அவர்கள் அடைவார்கள்). ஆக, முகங்கள் கருத்தவர்கள், - (அவர்களை நோக்கி கூறப்படும்:) “நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிராகரித்தீர்களா? ஆகவே, நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் தண்டனையை சுவையுங்கள்.’’
???????? ????????? ?????????? ??????????? ????? ???????? ???????? ???? ?????? ??????????
ஆக, முகங்கள் வெண்மையானவர்கள் அல்லாஹ்வின் அரு(ள்கள் நிறைந்த சொர்க்கங்க)ளில் இருப்பார்கள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
?????? ???????? ??????? ?????????? ???????? ??????????? ????? ??????? ??????? ??????? ???????????????
(நபியே!) இவை, அல்லாஹ்வின் வசனங்களாகும். அவற்றை உண்மையாகவே உமக்கு நாம் ஓதிக் காண்பிக்கிறோம். அல்லாஹ் அகிலத்தார்களுக்கு சிறிதும் அநியாயத்தை நாடமாட்டான்.
????????? ??? ??? ????????????? ????? ??? ?????????? ??????? ??????? ???????? ??????????
இன்னும், வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அல்லாஹ்விற்கே உரியன! இன்னும், அல்லாஹ்வின் பக்கமே காரியங்கள் அனைத்தும் திருப்பப்படும்.
??????? ?????? ??????? ?????????? ????????? ??????????? ?????????????? ???????????? ???? ?????????? ????????????? ?????????? ?????? ??????? ?????? ?????????? ??????? ??????? ??????? ????????? ?????????????? ?????????????? ?????????????
(நம்பிக்கையாளர்களே!) மக்களுக்காக உருவாக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மையை (மக்களுக்கு) ஏவுகிறீர்கள்; இன்னும், தீமையை விட்டும் (மக்களை) தடுக்கிறீர்கள்; இன்னும், அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறீர்கள். வேதக்காரர்களும் (உங்களைப் போன்று) நம்பிக்கை கொண்டால் அது அவர்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும். அவர்களில் நம்பிக்கையாளர்களும் உண்டு. அவர்களில் அதிகமானவர்களோ பாவிகள்தான்.