بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
????????????? ??????? ????????? ?????????? ?????????? ?????????????
இன்னும், நம்பிக்கையாளர்களை சோதி(த்து சுத்த)ப்ப(டுத்துவ)தற்காகவும், நிராகரிப்பாளர்களை அழிப்பதற்காகவும் (அல்லாஹ் காலங்களை சுழற்றுகின்றான்).
???? ?????????? ??? ??????????? ?????????? ???????? ???????? ??????? ????????? ?????????? ??????? ?????????? ??????????????
பொறுமையாளர்களை அறிவதுடன், உங்களில் (‘ஜிஹாது’) போர் புரிந்தவர்களை அல்லாஹ் (வெளிப்படையாக) அறியாமல், நீங்கள் சொர்க்கத்தில் பிரவேசிக்க நினைத்தீர்களா?
???????? ??????? ??????????? ????????? ??? ?????? ??? ?????????? ?????? ????????????? ????????? ??????????
இன்னும், திட்டவட்டமாக, (போரில்) மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னர் அதை ஆசைப்படுபவர்களாக இருந்தீர்கள். ஆக, (இப்போது) அதை நீங்கள் கண்கூடாக பார்த்தும் விட்டீர்கள்.
????? ????????? ?????? ??????? ???? ?????? ??? ???????? ?????????? ????????? ?????? ???? ?????? ???????????? ??????? ?????????????? ????? ????????? ?????? ?????????? ????? ??????? ??????? ????????? ??????????? ??????? ??????????????
முஹம்மத் ஒரு தூதரே தவிர (இறைவன்) இல்லை. அவருக்கு முன்னர் (பல) தூதர்கள் (வந்து) சென்றுவிட்டார்கள். அவர் இறந்தால்; அல்லது, கொல்லப்பட்டால் நீங்கள் (மார்க்கத்தை விட்டும்) உங்கள் குதிங்கால்கள் மீது புரண்டுவிடுவீர்களோ? எவர் தன் குதிங்கால்கள் மீது புரண்டுவிடுவாரோ (அவர்) அல்லாஹ்விற்கு எதையும் அறவே தீங்குசெய்யமுடியாது. நன்றி செலுத்துபவர்களுக்கு அல்லாஹ் (நற்)கூலி வழங்குவான்.
????? ????? ???????? ??? ??????? ?????? ???????? ??????? ???????? ???????????? ????? ?????? ??????? ?????????? ????????? ??????? ????? ?????? ??????? ??????????? ????????? ???????? ??????????? ??????????????
இன்னும், எந்த ஓர் ஆன்மாவும் மரணிப்பது சாத்தியம் இல்லை, அல்லாஹ்வின் அனுமதியுடன் காலம் குறிக்கப்பட்ட விதியின் படியே தவிர. இன்னும், எவர் உலகத்தின் நன்மையை நாடுவாரோ அவருக்கு அதிலிருந்து கொடுப்போம். இன்னும், எவர் மறுமையின் நன்மையை நாடுவாரோ அவருக்கு அதிலிருந்து கொடுப்போம். இன்னும், நன்றி செலுத்துபவர்களுக்கு (நற்)கூலி வழங்குவோம்.
?????????? ???? ???????? ??????? ??????? ??????????? ??????? ????? ????????? ?????? ??????????? ??? ??????? ??????? ????? ????????? ????? ?????????????? ????????? ??????? ??????????????
எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் (சேர்ந்து எதிரிகளிடம்) அதிகமான இறை நேச நல்லடியார்கள் போர் புரிந்தனர். ஆக, அல்லாஹ்வின் பாதையில் தங்களுக்கு ஏற்பட்ட (சிரமத்)தின் காரணமாக (எதிரிகள் முன்) அவர்கள் துணிவு இழக்கவில்லை; இன்னும், பலவீனமடையவில்லை; இன்னும், பணியவில்லை. அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்கள் மீது அன்பு வைக்கிறான்.
????? ????? ?????????? ??????? ??? ???????? ???????? ??????? ????? ?????????? ?????????????? ???? ????????? ????????? ???????????? ??????????? ????? ????????? ?????????????
இன்னும், “எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியத்தில் நாங்கள் வரம்புமீறியதையும் எங்களுக்கு மன்னிப்பாயாக! இன்னும், எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இன்னும், நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!’’ என்று கூறியதைத் தவிர அவர்களுடைய கூற்றாக (வேறொன்றும்) இருக்கவில்லை.
?????????????? ??????? ??????? ?????????? ???????? ??????? ???????????? ????????? ??????? ??????????????
ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு உலகத்தின் நன்மையையும், மறுமையின் அழகான நன்மையையும் கொடுத்தான். அல்லாஹ் நல்லறம் புரிபவர்கள் மீது அன்பு வைக்கிறான்.
????????????? ????????? ??????????? ??? ?????????? ????????? ????????? ???????????? ??????? ????????????? ?????????????? ??????????
நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் உங்கள் குதிங்கால்கள் மீது உங்களை அவர்கள் (இறை நம்பிக்கையிலிருந்து நிராகரிப்பின் பக்கம்) திருப்பி விடுவார்கள். ஆக, (அப்போது நீங்கள் வழிகெட்டு, இம்மையையும் மறுமையையும் இழந்து) நஷ்டவாளிகளாக திரும்பி விடுவீர்கள்.
???? ??????? ????????????? ?????? ?????? ??????????????
மாறாக, அல்லாஹ்தான் உங்கள் மவ்லா (தலைவன், பொறுப்பாளன், உரிமையாளன், நிர்வகிப்பவன், எஜமானன், பரிபாலிப்பவன், ஆதரவாளன், அரசன்) ஆவான். இன்னும், உதவியாளர்களில் அவனே (உங்களுக்கு மிகச்) சிறந்தவன் ஆவான்.