Quran Quote  : 

Surah Englsh Translation, Transliteration Tafsir [171-180]

Read More
Read Less
 

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

 

???????????????? ?????????? ????? ??????? ???????? ??????? ??????? ??? ??????? ?????? ??????????????

அல்லாஹ்விடமிருந்து கொடுக்கப்படும் கிருபையினாலும், அருளினாலும், “நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் கூலியை வீணாக்க மாட்டான்’’ என்பதினாலும் அவர்கள் மகிழ்ச்சியாக உற்சாகமாக இருப்பார்கள்.

????????? ????????????? ??????? ???????????? ???? ?????? ???? ??????????? ?????????? ?????????? ??????????? ???????? ???????????? ?????? ???????

அவர்கள் (-அந்த உண்மையான நம்பிக்கையாளர்கள்) தங்களுக்கு காயமேற்பட்ட பின்னரும் அல்லாஹ்விற்கும் தூதருக்கும் பதிலளித்தார்கள். (அவர்கள் காயங்களுடன் இருந்தபோதும் தூதரின் அழைப்பை ஏற்று போருக்கு சென்றார்கள்.) நல்லறம் புரிந்து, அல்லாஹ்வை அஞ்சிய (அ)வர்களுக்கு மகத்தான கூலி உண்டு.

????????? ????? ?????? ???????? ????? ???????? ???? ????????? ?????? ????????????? ??????????? ????????? ?????????? ????????? ??????? ???????? ??????????

(-அந்த உண்மையான நம்பிக்கையாளர்கள்,) மக்கள் அவர்களுக்கு கூறினர்: “நிச்சயமாக மக்கள் (தங்கள் படைகளையும் ஆயுதங்களையும்) உங்களுக்காக (-உங்களை எதிர்ப்பதற்காக) திட்டமாக ஒன்று சேர்த்துள்ளனர், ஆகவே, அவர்களைப் பயப்படுங்கள்! (அவர்களுடன் போருக்கு சென்று விடாதீர்கள்!)’’ ஆனால், இந்த அச்சுறுத்தலோ அவர்களுக்கு நம்பிக்கையை(த்தான் மேலும்) அதிகப்படுத்தியது. இன்னும், “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன், அவன் சிறந்த பொறுப்பாளன்’’ என்று அவர்கள் (நம்பிக்கையுடன்) கூறினார்கள்.

????????????? ?????????? ????? ??????? ???????? ????? ???????????? ?????? ????????????? ????????? ???????? ????????? ??? ?????? ???????

ஆக, அல்லாஹ்வின் கிருபை இன்னும் அருளுடன் அவர்கள் திரும்பினார்கள். அவர்களை ஒரு தீங்கும் அணுகவில்லை. இன்னும் அல்லாஹ்வின் விருப்பத்தை அவர்கள் பின்பற்றினார்கள். அல்லாஹ் (நம்பிக்கையாளர்கள் மீது) மகத்தான அருளுடையவன் ஆவான்.

???????? ????????? ???????????? ????????? ??????????????? ????? ???????????? ?????????? ??? ?????? ????????????

(உங்களை அச்சுறுத்திய) அவனெல்லாம் ஷைத்தான்தான். (அவன்) தன்(னை நம்புகின்ற) நண்பர்களை பயமுறுத்துகிறான். ஆகவே, நீங்கள் (உண்மையான, உறுதியான) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களைப் பயப்படாதீர்கள்; (உங்கள் இறைவனாகிய) என்னைப் பயப்படுங்கள்.

????? ????????? ????????? ???????????? ??? ?????????? ????????? ??? ?????????? ??????? ????????? ??????? ??????? ?????? ???????? ?????? ?????? ??? ???????????? ???????? ??????? ???????

இன்னும், (நபியே!) நிராகரிப்பில் விரைபவர்கள் உம்மை கவலைப்படுத்த வேண்டாம். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்விற்கு எதையும் அறவே தீங்கிழைக்க மாட்டார்கள். மறுமையில் அறவே நற்பாக்கியத்தை அவர்களுக்கு ஏற்படுத்தாமல் இருக்கவே அல்லாஹ் நாடுகிறான். இன்னும், அவர்களுக்கு மகத்தான தண்டனை உண்டு.

????? ????????? ??????????? ????????? ????????????? ??? ?????????? ??????? ????????? ???????? ??????? ???????

நிச்சயமாக, நம்பிக்கைக்குப் பகரமாக நிராகரிப்பை வாங்கியவர்கள் அல்லாஹ்விற்கு எதையும் அறவே தீங்கிழைக்க மாட்டார்கள். இன்னும், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு.

????? ??????????? ????????? ?????????? ???????? ??????? ?????? ?????? ??????????????? ???????? ??????? ?????? ??????????????? ???????? ???????? ??????? ????????

நிராகரிப்பவர்கள் - “நாம் அவர்க(ளை உடனே தண்டிக்காமல் அவர்க)ளுக்கு அவகாசம் அளிப்பது அவர்களுக்கு நல்லதென்று” - நிச்சயம் எண்ண வேண்டாம். நாம் அவர்களுக்கு அவகாசமளிப்பதெல்லாம், அவர்கள் பாவத்தால் அதிகரிப்பதற்காகவே. இன்னும், இழிவுபடுத்தும் தண்டனையும் அவர்களுக்குண்டு.

???? ????? ??????? ???????? ?????????????? ?????? ???? ??????? ???????? ??????? ??????? ?????????? ???? ??????????? ????? ????? ??????? ?????????????? ????? ????????? ?????????? ??????? ????????? ??? ?????????? ??? ????????? ????????????? ????????? ???????????? ????? ??????????? ???????????? ???????? ?????? ???????

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இருக்கின்ற இதே நிலையில் நம்பிக்கையாளர்(களாகிய உங்)களை அல்லாஹ் விட்டுவிடுபவனாக இல்லை. (சோதனையின்) இறுதியாக நல்லவர்களிலிருந்து, தீயவர்களை பிரிப்பான். இன்னும், மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவிப்பவனாகவும் இல்லை. எனினும் தன் தூதர்களில் தான் நாடியவர்களை அல்லாஹ் தேர்ந்தெடு(த்து அவருக்கு அறிவி)ப்பான். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். இன்னும், நீங்கள் நம்பிக்கை கொண்டால், அல்லாஹ்வை அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி (அல்லாஹ்விடம்) உண்டு.

????? ??????????? ????????? ??????????? ?????? ??????????? ??????? ??? ????????? ???? ??????? ??????? ???? ???? ????? ???????? ?????????????? ??? ????????? ????? ?????? ????????????? ????????? ???????? ????????????? ???????????? ????????? ????? ??????????? ???????

இன்னும், அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்கு கொடுத்ததில் கஞ்சத்தனம் செய்பவர்கள், “அது தங்களுக்கு நல்லது” என்று எண்ண வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீமையாகும். அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ (அது மறுமையில் விஷப் பாம்பாக மாற்றப்பட்டு அவர்களின் கழுத்துகளில்) அதை சுற்றப்படுவார்கள். இன்னும், வானங்கள் இன்னும் பூமியின் உரிமை அல்லாஹ்விற்கே உரியதாகும். இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்.

Surah tamil Translation and Transliteration

In Surah you can read the translation of Ahmad Raza Khan who was a renowned scholar of the Islamic world and his translation book is known as Kanzul Imaan. You can read the transliteration of Surah which will help you to understand how to read the Arabic text. Apart from that, we have included a Word-By-Word tamil Translation of the Arabic text of Surah .

Surah tamil Tafsir/Tafseer (Commentry)

In Surah we have included two Tafseer (Commentary) in tamil. The first one is from Mufti Ahmad Yaar Khan who was a well-known scholar. In this tafsir, we have also included the most popular Tafsir Ibn-Kathir which is the most comprehensive tafsir available in the world. You can read both or any one of your choice.

Sign up for Newsletter