بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
يَـٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تَلۡبِسُونَ ٱلۡحَقَّ بِٱلۡبَٰطِلِ وَتَكۡتُمُونَ ٱلۡحَقَّ وَأَنتُمۡ تَعۡلَمُونَ
வேதக்காரர்களே! ஏன் உண்மையை பொய்யுடன் குழப்புகிறீர்கள்? இன்னும், நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை ஏன் மறைக்கிறீர்கள்?
وَقَالَت طَّآئِفَةٞ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ ءَامِنُواْ بِٱلَّذِيٓ أُنزِلَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُواْ وَجۡهَ ٱلنَّهَارِ وَٱكۡفُرُوٓاْ ءَاخِرَهُۥ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ
இன்னும், வேதக்காரர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்களில் சிலரை நோக்கிக்) கூறினர்: “நீங்கள் நம்பிக்கையாளர்களுக்கு இறக்கப்பட்டதை பகலின் ஆரம்பத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள்; அவர்கள் (தங்கள் நம்பிக்கையிலிருந்து) திரும்புவதற்காக அதன் இறுதியில் (அதை) நிராகரித்து விடுங்கள்.”
وَلَا تُؤۡمِنُوٓاْ إِلَّا لِمَن تَبِعَ دِينَكُمۡ قُلۡ إِنَّ ٱلۡهُدَىٰ هُدَى ٱللَّهِ أَن يُؤۡتَىٰٓ أَحَدٞ مِّثۡلَ مَآ أُوتِيتُمۡ أَوۡ يُحَآجُّوكُمۡ عِندَ رَبِّكُمۡۗ قُلۡ إِنَّ ٱلۡفَضۡلَ بِيَدِ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ
இன்னும், (அவர்கள் கூறினார்கள்:) “உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவரைத் தவிர (முஸ்லிம்களை) நம்பாதீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்டது போன்று (ஒரு வேதம் வேறு) ஒருவருக்கு கொடுக்கப்படும் என்றோ அல்லது (முஸ்லிம்கள் மறுமையில்) உங்கள் இறைவனுக்கு முன்னர் உங்களோடு தர்க்கிப்பார்கள் என்றோ நம்பாதீர்கள்.’’ (இவ்வாறு அவர்கள் கூறினார்கள்). (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக நேர்வழி என்பது அல்லாஹ்வின் நேர்வழிதான்.” (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக அருள் அல்லாஹ்வின் கையில்தான் இருக்கிறது. (அவன்) நாடியவருக்கு அதைக் கொடுக்கிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்.’’
يَخۡتَصُّ بِرَحۡمَتِهِۦ مَن يَشَآءُۗ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ
(அல்லாஹ்) தான் நாடுகிறவரை தன் அருளுக்குச் சொந்தமாக்குகிறான். இன்னும், அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்.
۞وَمِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ مَنۡ إِن تَأۡمَنۡهُ بِقِنطَارٖ يُؤَدِّهِۦٓ إِلَيۡكَ وَمِنۡهُم مَّنۡ إِن تَأۡمَنۡهُ بِدِينَارٖ لَّا يُؤَدِّهِۦٓ إِلَيۡكَ إِلَّا مَا دُمۡتَ عَلَيۡهِ قَآئِمٗاۗ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُواْ لَيۡسَ عَلَيۡنَا فِي ٱلۡأُمِّيِّـۧنَ سَبِيلٞ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ وَهُمۡ يَعۡلَمُونَ
வேதக்காரர்களில் சிலர் இருக்கிறார்கள். (நீர்) ஒரு பொற்குவியலை அவர்களிடம் நம்பி கொடுத்தாலும் (குறைவின்றி) உமக்கு அதை அவர்கள் (திரும்ப) ஒப்படைத்துவிடுவார்கள். இன்னும், அவர்களில் சிலர் இருக்கிறார்கள். ஒரு தீனார் நாணயத்தை நீர் அவர்களிடம் நம்பி ஒப்படைத்தாலும் அதை உமக்கு அவர்கள் (திரும்ப) ஒப்படைக்க மாட்டார்கள், அவர்களிடம் (நீர்) தொடர்ந்து நின்று கொண்டிருந்தால் தவிர. அதற்கு காரணமாவது, “(யூதரல்லாத மற்ற) பாமரர்கள் விஷயத்தில் (நாம் என்ன அநியாயம் செய்தாலும் அது) நம்மீது குற்றமில்லை’’ என்று நிச்சயமாக அவர்கள் கூறியதாகும். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய் கூறுகிறார்கள்.
بَلَىٰۚ مَنۡ أَوۡفَىٰ بِعَهۡدِهِۦ وَٱتَّقَىٰ فَإِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَّقِينَ
(குற்றம்) ஏனில்லை. யார் தனது உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றி, அல்லாஹ்வை அஞ்சினாரோ, நிச்சயமாக, அல்லாஹ் தன்னை அஞ்சுபவர்கள் மீது அன்பு வைக்கிறான்.
إِنَّ ٱلَّذِينَ يَشۡتَرُونَ بِعَهۡدِ ٱللَّهِ وَأَيۡمَٰنِهِمۡ ثَمَنٗا قَلِيلًا أُوْلَـٰٓئِكَ لَا خَلَٰقَ لَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ وَلَا يَنظُرُ إِلَيۡهِمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَلَا يُزَكِّيهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய உடன்படிக்கைக்கு பதிலாகவும் தங்கள் சத்தியங்களுக்கு பதிலாக சொற்ப கிரயத்தை வாங்குகிறார்களோ அவர்களுக்கு மறுமையில் அறவே (நற்)பாக்கியமில்லை. இன்னும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்; இன்னும், அவர்கள் பக்கம் பார்க்க மாட்டான்; இன்னும், அவர்களைத் தூய்மைப்படுத்த மாட்டான். இன்னும், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு.
وَإِنَّ مِنۡهُمۡ لَفَرِيقٗا يَلۡوُۥنَ أَلۡسِنَتَهُم بِٱلۡكِتَٰبِ لِتَحۡسَبُوهُ مِنَ ٱلۡكِتَٰبِ وَمَا هُوَ مِنَ ٱلۡكِتَٰبِ وَيَقُولُونَ هُوَ مِنۡ عِندِ ٱللَّهِ وَمَا هُوَ مِنۡ عِندِ ٱللَّهِۖ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ وَهُمۡ يَعۡلَمُونَ
இன்னும் நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் வேதத்(தை ஓதுவ)தில் தங்கள் நாவைக் கோணுகிறார்கள், வேதத்திலுள்ளதுதான் என (நீங்கள்) அதை எண்ணுவதற்காக. ஆனால், அது வேதத்தில் உள்ளதல்ல. இன்னும், “அது அல்லாஹ்விடமிருந்து வந்தது’’ எனக் கூறுகிறார்கள். ஆனால், அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அவர்கள் அறிந்தே அல்லாஹ்வின் மீது பொய் கூறுகிறார்கள்.
مَا كَانَ لِبَشَرٍ أَن يُؤۡتِيَهُ ٱللَّهُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحُكۡمَ وَٱلنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ لِلنَّاسِ كُونُواْ عِبَادٗا لِّي مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِن كُونُواْ رَبَّـٰنِيِّـۧنَ بِمَا كُنتُمۡ تُعَلِّمُونَ ٱلۡكِتَٰبَ وَبِمَا كُنتُمۡ تَدۡرُسُونَ
வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் ஒரு மனிதருக்கு கொடுக்க, பிறகு அவர் மக்களை நோக்கி, “அல்லாஹ்வைத் தவிர்த்து என்னை வணங்குபவர்களாக நீங்கள் ஆகிவிடுங்கள்’’ என்று கூறுவதற்கு அவருக்கு அறவே உரிமையில்லை. என்றாலும், (மக்களை நோக்கி கூறியதாவது), “வேதத்தை (மற்றவர்களுக்குக்) கற்பிப்பவர்களாக நீங்கள் இருப்பதாலும், (அதை) நீங்கள் கற்பவர்களாக இருப்பதாலும் மக்களை சீர்திருத்தம் செய்கின்ற இறையச்சமுள்ள பொறுப்பாளர்களாக (நல்ல வழிகாட்டிகளாக) ஆகிவிடுங்கள்!’’
وَلَا يَأۡمُرَكُمۡ أَن تَتَّخِذُواْ ٱلۡمَلَـٰٓئِكَةَ وَٱلنَّبِيِّـۧنَ أَرۡبَابًاۚ أَيَأۡمُرُكُم بِٱلۡكُفۡرِ بَعۡدَ إِذۡ أَنتُم مُّسۡلِمُونَ
இன்னும், “மலக்குகளையும், நபிமார்களையும் வணங்கப்படும் தெய்வங்களாக (நீங்கள்) எடுத்துக் கொள்ளுங்கள்” என்று (அவர்) உங்களை ஏவுவதற்கும் அவருக்கு உரிமை இல்லை. நீங்கள் முஸ்லிம்களாக ஆகிய பின்னர் நிராகரிப்பை அவர் உங்களுக்கு ஏவுவாரா?