بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
فَبَعَثَ ٱللَّهُ غُرَابٗا يَبۡحَثُ فِي ٱلۡأَرۡضِ لِيُرِيَهُۥ كَيۡفَ يُوَٰرِي سَوۡءَةَ أَخِيهِۚ قَالَ يَٰوَيۡلَتَىٰٓ أَعَجَزۡتُ أَنۡ أَكُونَ مِثۡلَ هَٰذَا ٱلۡغُرَابِ فَأُوَٰرِيَ سَوۡءَةَ أَخِيۖ فَأَصۡبَحَ مِنَ ٱلنَّـٰدِمِينَ
ஆக, தன் சகோதரரின் சடலத்தை எவ்வாறு அவன் மறைப்பான் என்பதை அவனுக்கு அல்லாஹ் காட்டுவதற்காக (இறந்த இன்னொரு காகத்தை புதைக்க) பூமியை தோண்டுகிற ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான். அவன், என் நாசமே! (அறிவில்) இந்தக் காகத்தைப் போன்று நான் ஆக முடியாமல் பலவீனமடைந்து விட்டேனா! அப்படி ஆகியிருந்தால் என் சகோதரனின் சடலத்தை மறைத்திருப்பேனே! என்று கூறினான். ஆக, (சதா) வருந்துபவர்களில் அவன் ஆகிவிட்டான்.
مِنۡ أَجۡلِ ذَٰلِكَ كَتَبۡنَا عَلَىٰ بَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ أَنَّهُۥ مَن قَتَلَ نَفۡسَۢا بِغَيۡرِ نَفۡسٍ أَوۡ فَسَادٖ فِي ٱلۡأَرۡضِ فَكَأَنَّمَا قَتَلَ ٱلنَّاسَ جَمِيعٗا وَمَنۡ أَحۡيَاهَا فَكَأَنَّمَآ أَحۡيَا ٱلنَّاسَ جَمِيعٗاۚ وَلَقَدۡ جَآءَتۡهُمۡ رُسُلُنَا بِٱلۡبَيِّنَٰتِ ثُمَّ إِنَّ كَثِيرٗا مِّنۡهُم بَعۡدَ ذَٰلِكَ فِي ٱلۡأَرۡضِ لَمُسۡرِفُونَ
அதன் காரணமாக, “எவர் பழிக்குப் பழி அல்லாமல் அல்லது பூமியில் விஷமம் (கலகம், குழப்பம், சீர்கேடு) செய்ததற்காக அல்லாமல் (அநியாயமாக) ஓர் உயிரைக் கொன்றாரோ அவர் மக்கள் அனைவரையுமே கொன்றவர் போலாவார். இன்னும், எவர் ஓர் உயிரை வாழவைத்தாரோ அவர் மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்’’ என்று இஸ்ரவேலர்கள் மீது (சட்டமாக) விதித்தோம். திட்டமாக அவர்களிடம் நம் தூதர்கள் அத்தாட்சிகளுடன் வந்தார்கள். பிறகு, நிச்சயமாக அவர்களில் அதிகமானவர்கள் அதன் பின்னர் பூமியில் எல்லை மீறுகிறார்கள் (-அளவு கடந்து பெரும் பாவங்கள் செய்கிறார்கள்).
إِنَّمَا جَزَـٰٓؤُاْ ٱلَّذِينَ يُحَارِبُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَسۡعَوۡنَ فِي ٱلۡأَرۡضِ فَسَادًا أَن يُقَتَّلُوٓاْ أَوۡ يُصَلَّبُوٓاْ أَوۡ تُقَطَّعَ أَيۡدِيهِمۡ وَأَرۡجُلُهُم مِّنۡ خِلَٰفٍ أَوۡ يُنفَوۡاْ مِنَ ٱلۡأَرۡضِۚ ذَٰلِكَ لَهُمۡ خِزۡيٞ فِي ٱلدُّنۡيَاۖ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுபவர்கள்; இன்னும், பூமியில் குழப்பம்(கலகம், நாசவேலைகள், சீர்கேடுகள்) செய்ய முயல்பவர்களுடைய தண்டனையெல்லாம் அவர்கள் கொல்லப்படுவது; அல்லது, அவர்கள் கழுமரத்தில் அறையப்படுவது; அல்லது அவர்கள் மாறு கை, மாறு கால் வெட்டப்படுவது; அல்லது, அந்த நாட்டில் இருந்து (வேறு நாட்டுக்கு) அவர்கள் கடத்தப்படுவதுதான். இது, அவர்களுக்கு இவ்வுலகத்திலுள்ள இழிவாகும். இன்னும், அவர்களுக்கு மறுமையில் பெரிய தண்டனை உண்டு.
إِلَّا ٱلَّذِينَ تَابُواْ مِن قَبۡلِ أَن تَقۡدِرُواْ عَلَيۡهِمۡۖ فَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ
எனினும், எவர்கள் (கலகம் செய்த பின்னர் அவர்கள்) மீது நீங்கள் ஆற்றல் பெறுவதற்கு முன்னர் அவர்கள் (மன்னிப்புக் கோரி) திருந்தி (உங்களிடம்) திரும்பிவந்தார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்.) ஆக, நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَٱبۡتَغُوٓاْ إِلَيۡهِ ٱلۡوَسِيلَةَ وَجَٰهِدُواْ فِي سَبِيلِهِۦ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும் அவனளவில் (உங்களை) நெருக்கமாக்கி வைக்கும் நன்மையைத் தேடுங்கள்! இன்னும், அவனுடைய பாதையில் போரிடுங்கள்!
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡ أَنَّ لَهُم مَّا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا وَمِثۡلَهُۥ مَعَهُۥ لِيَفۡتَدُواْ بِهِۦ مِنۡ عَذَابِ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ مَا تُقُبِّلَ مِنۡهُمۡۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ
நிச்சயமாக நிராகரித்தவர்கள் மறுமை நாளின் தண்டனையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்காக, இப்பூமியிலுள்ள அனைத்தும், அத்துடன் அவை போன்றதும் அவர்களுக்கு இருந்து, அவர்கள் அவற்றை மீட்புத் தொகையாக கொடுத்தாலும் அவர்களிடமிருந்து (அவை) அங்கீகரிக்கப்படாது. இன்னும், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு.
يُرِيدُونَ أَن يَخۡرُجُواْ مِنَ ٱلنَّارِ وَمَا هُم بِخَٰرِجِينَ مِنۡهَاۖ وَلَهُمۡ عَذَابٞ مُّقِيمٞ
அவர்கள் நரகத்திலிருந்து வெளியேற விரும்புவார்கள். ஆனால், அதிலிருந்து அவர்கள் வெளியேறவே முடியாது. இன்னும் நிலையான தண்டனை அவர்களுக்கு உண்டு.
وَٱلسَّارِقُ وَٱلسَّارِقَةُ فَٱقۡطَعُوٓاْ أَيۡدِيَهُمَا جَزَآءَۢ بِمَا كَسَبَا نَكَٰلٗا مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٞ
இன்னும், எந்த ஆண் திருடுகிறானோ, எந்த பெண் திருடுகிறாளோ அவ்விருவரும் செய்ததற்கு கூலியாக, அல்லாஹ்விடமிருந்து தண்டனையாக அவ்விருவரின் (வலது) கரங்களை (மணிக்கட்டு வரை) வெட்டுங்கள். அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
فَمَن تَابَ مِنۢ بَعۡدِ ظُلۡمِهِۦ وَأَصۡلَحَ فَإِنَّ ٱللَّهَ يَتُوبُ عَلَيۡهِۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ
ஆக, எவர் தனது குற்றத்திற்குப் பின்னர் திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி (தன்னைத்) திருத்திக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவரை மன்னி(த்து அவருடைய தவ்பாவை அங்கீகரி)ப்பான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.
أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ يُعَذِّبُ مَن يَشَآءُ وَيَغۡفِرُ لِمَن يَشَآءُۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
நிச்சயமாக அல்லாஹ், வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? அவன், தான் நாடியவர்களை தண்டிப்பான். இன்னும், தான் நாடியவர்களை அவன் மன்னிப்பான். இன்னும், அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன்.