بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
????????????? ???????? ?????????? ??????? ??????????? ??????????? ??????? ?????? ??????? ????????,
அவர்களுடைய இறைவன் தன்னிடமிருந்து (தன்) கருணை; இன்னும், (தனது) பொருத்தம்; இன்னும், சொர்க்கங்களைக் கொண்டு அவர்களுக்கு நற்செய்தி கூறுகிறான். அவற்றில் அவர்களுக்கு நிலையான இன்பம் உண்டு.
?????????? ??????? ???????? ????? ??????? ????????? ?????? ???????,
அவற்றில் அவர்கள் எப்போதும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். நிச்சயமாக அல்லாஹ், - அவனிடம் மகத்தான கூலியுண்டு.
????????????? ????????? ?????????? ??? ????????????? ????????????? ??????????????? ???????????? ???? ????????????? ????????? ????? ???????????? ????? ???????????? ???????? ??????????????? ???? ??????????????,
நம்பிக்கையாளர்களே! உங்கள் தந்தைமார்களையும், (உங்கள் தாய்மார்களையும்) உங்கள் சகோதரர்களையும் (உங்கள் சகோதரிகளையும் உங்களுக்கு உற்ற நேசர்களாகவும்) பொறுப்பாளர்களாக(வும்) எடுத்துக் கொள்ளாதீர்கள், - அவர்கள் (இஸ்லாமை ஏற்காமல்) இறைநம்பிக்கையை விட நிராகரிப்பை விரும்பினால். இன்னும், உங்களில் எவர்கள் அவர்களை பொறுப்பாளர்களாக (நேசர்களாக) ஆக்கிக் கொள்வார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
???? ??? ????? ????????????? ???????????????? ??????????????? ??????????????? ??????????????? ??????????? ????????????????? ??????????? ?????????? ?????????? ??????????? ?????????????? ??????? ????????? ????? ??????? ???????????? ????????? ??? ?????????? ?????????????? ??????? ???????? ??????? ???????????? ????????? ??? ??????? ????????? ?????????????,
(நபியே! நம்பிக்கையாளர்களை நோக்கி) கூறுவீராக: “உங்கள் தந்தைமார்களும், (உங்கள் தாய்மார்களும்) உங்கள் ஆண் பிள்ளைகளும், (உங்கள் பெண் பிள்ளைகளும்) உங்கள் சகோதரர்களும், (உங்கள் சகோதரிகளும்) உங்கள் மனைவிகளும், (நீங்கள் பெண்களாக இருந்தால் உங்கள் கணவன்மார்களும்) உங்கள் குடும்பமும், நீங்கள் சம்பாதித்த செல்வங்களும், அது மந்தமாகிவிடுமோ என்று நீங்கள் பயப்படும் வர்த்தகமும், நீங்கள் விரும்பும் வீடுகளும் அல்லாஹ்வை விட; இன்னும், அவனுடைய தூதரை விட; இன்னும், அவனுடைய பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு மிக விருப்பமாக இருந்தால் அல்லாஹ் (உங்களிடம்) தன் (தண்டனையின்) கட்டளையைக் கொண்டு வரும் வரை எதிர்பாருங்கள். இன்னும், அல்லாஹ் பாவிகளான மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
?????? ?????????? ??????? ??? ????????? ????????? ???????? ???????? ???? ?????????????? ???????????? ?????? ?????? ??????? ???????? ????????? ?????????? ????????? ????? ???????? ????? ?????????? ????????????,
அதிகமான போர்க்களங்களிலும் ஹுனைன் போரிலும் அல்லாஹ் உங்களுக்கு திட்டவட்டமாக உதவினான். நீங்கள் (எண்ணிக்கையில்) அதிகமாக இருப்பது உங்களை பெருமைப்படுத்தியபோது (அந்த எண்ணிக்கை) உங்களுக்கு எதையும் பலன் தரவில்லை. இன்னும், பூமி - அது விசாலமாக இருந்தும் உங்களுக்கு நெருக்கடியாகி விட்டது. பிறகு, நீங்கள் புறமுதுகு காட்டியவர்களாக திரும்பி (ஓடி)னீர்கள்.
????? ??????? ??????? ???????????? ?????? ?????????? ??????? ?????????????? ????????? ???????? ????? ????????? ????????? ????????? ?????????? ????????? ???????? ?????????????,
பிறகு, அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டவர்கள் மீதும் தன் (புறத்திலிருந்து) அமைதியை இறக்கினான். இன்னும், சில படைகளை இறக்கினான். அவர்களை நீங்கள் பார்க்கவில்லை. இன்னும், நிராகரித்தவர்களை தண்டித்தான். இதுதான் நிராகரிப்பவர்களின் கூலியாகும்.
????? ??????? ??????? ???? ?????? ??????? ?????? ??? ????????? ????????? ??????? ????????,
பிறகு, அதற்குப் பின்னர் அல்லாஹ், தான் நாடியவர்களை திருந்த செய்து அவர்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.
????????????? ????????? ??????????? ???????? ?????????????? ?????? ????? ??????????? ??????????? ?????????? ?????? ????????? ??????? ?????? ???????? ???????? ???????? ??????????? ??????? ??? ?????????? ??? ??????? ????? ??????? ??????? ???????,
நம்பிக்கையாளர்களே! இணைவைப்பவர்கள் எல்லாம் அசுத்தமானவர்கள். ஆகவே, அவர்கள் அவர்களுடைய இந்த ஆண்டிற்குப் பின்னர் புனித மஸ்ஜிதை நெருங்கக் கூடாது. வறுமையை நீங்கள் பயந்தால், தனது அருளினால் உங்களை நிறைவாக்குவான் (உங்களுக்கு தேவையான செல்வத்தை வழங்குவான்) அல்லாஹ் நாடினால். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
?????????? ????????? ??? ??????????? ????????? ????? ??????????? ????????? ????? ???????????? ??? ??????? ??????? ???????????? ????? ?????????? ????? ???????? ???? ????????? ???????? ?????????? ??????? ????????? ??????????? ??? ???? ?????? ??????????,
வேதம் கொடுக்கப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளாமல், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்தவற்றை தடை செய்யாமல், சத்திய மார்க்கத்தை மார்க்கமாக ஏற்காமல் இருக்கிறார்களோ அவர்களிடம் - அவர்களோ (சிறுமையடைந்தவர்களாக) பணிந்தவர்களாக இருக்கும் நிலையில், உடனே வரியை கொடுக்கும் வரை - நீங்கள் போர் புரியுங்கள்.
????????? ?????????? ???????? ????? ??????? ????????? ??????????? ?????????? ????? ???????? ??????? ????????? ???????????????? ????????????? ?????? ????????? ????????? ??? ??????? ??????????? ???????? ??????? ???????????,
‘உஸைர்’ அல்லாஹ்வுடைய மகன் என்று யூதர்கள் கூறுகிறார்கள். ‘மஸீஹ்’அல்லாஹ்வுடைய மகன் என்று கிறித்தவர்கள் கூறுகிறார்கள். இது, அவர்களின் வாய்களில் இருந்து வரும் அவர்களின் (கற்பனைக்) கூற்றாகும் (உண்மையில்லை). முன்னர் நிராகரித்தவர்களின் கூற்றுக்கு ஒப்பா(க இவர்களும் பேசு)கிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். அவர்கள் எப்படி (உண்மையை விட்டு வழிகேட்டின் பக்கம்) திருப்பப்படுகிறார்கள்?