Quran Quote  : 

Surah Englsh Translation, Transliteration Tafsir [21-30]

Read More
Read Less
 

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

 

?????????? ????????????? ???? ?????????? ?????????? ????????? ?????????? ??????? ???????? ??????? ????? ??????? ?????? ?????????? ??????? ??????? ?????????? ???????????

இன்னும், அவர்கள் தங்களுடைய தோல்களிடம், “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்” என்று கூறுவார்கள். அதற்கு அவை கூறும்: “எல்லாவற்றையும் பேசவைத்த அல்லாஹ்தான் எங்களையும் (இன்று) பேச வைத்தான்.” (மனிதர்களே!) அவன்தான் உங்களை முதல் முறையாகப் படைத்தான். இன்னும் அவன் பக்கம்தான் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

????? ??????? ????????????? ??? ???????? ?????????? ?????????? ?????? ????????????? ????? ??????????? ???????? ????????? ????? ??????? ??? ???????? ???????? ??????? ???????????

உங்களுக்கு எதிராக உங்கள் செவியும் உங்கள் பார்வைகளும் உங்கள் தோல்களும் சாட்சி கூறிவிடும் என்பதற்காக நீங்கள் (உங்கள் செயல்களை) மறைப்பவர்களாக இருக்கவில்லை. (ஏனெனில் உங்களுக்கு மறுமை நம்பிக்கை இல்லை. இன்னும், உங்கள் செயல்களை மறைக்கவும் உங்களால் முடியாது.) என்றாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதில் அதிகமானதை அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணினீர்கள்.

??????????? ????????? ??????? ???????? ??????????? ???????????? ????????????? ????? ?????????????

உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய அந்த உங்கள் எண்ணம்தான் உங்களை நாசமாக்கியது. ஆகவே, நீங்கள் நஷ்டவாளிகளில் ஆகிவிட்டீர்கள்.

????? ??????????? ?????????? ??????? ???????? ????? ??????????????? ????? ??? ????? ??????????????

ஆக, அவர்கள் பொறுமையாக இருந்தாலும், (பொறுமையாக இல்லை என்றாலும்,) நரகம்தான் அவர்களுக்கு தங்குமிடமாகும். அவர்கள் (அல்லாஹ்வின்) பொருத்தத்தை தேடினாலும் அவர்கள் (அல்லாஹ்வின்) பொருத்தம் பெற்றவர்களில் ஆக மாட்டார்கள்.

????????????? ?????? ?????????? ???????????? ????? ???? ?????? ??????????? ????? ?????????? ??????? ?????????? ????????? ???? ?????? ???? ?????? ??? ????????? ????? ???????? ??????????? ????????? ???????? ??????????

இன்னும், (நிராகரிப்பாளர்களாகிய) அவர்களுக்கு சில நண்பர்களை நாம் இலகுவாக அமைத்துக் கொடுத்தோம். ஆக, அவர்களுக்கு முன்னுள்ளதையும் அவர்களுக்கு பின்னுள்ளதையும் அந்த நண்பர்கள் அலங்கரித்துக் காட்டினார்கள். இவர்களுக்கு முன்னர் சென்றுவிட்ட ஜின்கள் மற்றும் மனிதர்களில் உள்ள (பாவிகளான) சமுதாயங்களுக்கு விதிக்கப்பட்ட அதே விதி (-அதே தண்டனை) இவர்கள் மீதும் உறுதியாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் நஷ்டவாளிகளாக இருக்கிறார்கள்.

??????? ????????? ????????? ??? ??????????? ???????? ???????????? ??????????? ????? ??????????? ???????????

நிராகரிப்பாளர்கள் கூறினார்கள்: “இந்த குர்ஆனை நீங்கள் செவியுறாதீர்கள் (அதை ஏற்காதீர்கள்), இன்னும், அதில் (-அது ஓதப்படும்போது பிறர் கேட்க முடியாதவாறு) கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்துங்கள்! (அவரை ஓதவிடாமல் செய்ய வேண்டும், பிறரை கேட்கவிடாமல் செய்ய வேண்டும் என்ற உங்கள் நோக்கத்தில்) நீங்கள் வெற்றி பெறுவதற்காக.”

?????????????? ????????? ????????? ???????? ???????? ??????????????????? ???????? ??????? ???????? ???????????

ஆகவே, நிராகரித்தவர்களுக்கு கடுமையான தண்டனையை நிச்சயமாக சுவைக்க வைப்போம். இன்னும், நிச்சயமாக, அவர்கள் செய்து கொண்டிருந்த மிகக் கெட்ட செயலுக்கு (தகுந்த) கூலியை அவர்களுக்கு கொடுப்போம்.

??????? ???????? ?????????? ??????? ????????? ?????? ?????? ????? ????????? ????????? ????? ???????? ?????????????? ???????????

இதுதான் அல்லாஹ்வின் எதிரிகளுக்குரிய நரகம் என்ற கூலியாகும். அதில் அவர்களுக்கு நிரந்தரமாக தங்கும் இல்லம் உண்டு, நமது வசனங்களை அவர்கள் மறுப்பவர்களாக இருந்ததற்குக் கூலியாக.

??????? ????????? ????????? ????????? ??????? ?????????? ??????????? ???? ???????? ?????????? ????????????? ?????? ???????????? ?????????? ???? ??????????????

நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! ஜின் மற்றும் மனிதர்களில் எங்களை வழிகெடுத்தவர்களை எங்களுக்குக் காண்பித்துக் கொடு! அவர்கள் (- வழிகெடுத்த அந்த இரு கூட்டங்களும்) மிகக் கீழ்த்தரமானவர்களில் ஆகிவிடுவதற்காக அவர்களை நாங்கள் எங்கள் பாதங்களுக்குக் கீழ் ஆக்கி (மிதித்து) விடுகிறோம்.”

????? ????????? ???????? ???????? ??????? ????? ????????????? ??????????? ?????????? ???????????????? ?????? ?????????? ????? ??????????? ????????????? ???????????? ??????? ??????? ??????????

நிச்சயமாக எவர்கள், “(நாங்கள் வணங்கத்தகுதியான) எங்கள் இறைவன், அல்லாஹ்தான்” என்று கூறி; பிறகு, (அதில்) உறுதியாக இருந்தார்களோ அவர்கள் மீது வானவர்கள் இறங்குவார்கள். (அந்த வானவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கிக் கூறுவார்கள்:) “நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி பெறுங்கள்!”

Surah tamil Translation and Transliteration

In Surah you can read the translation of Ahmad Raza Khan who was a renowned scholar of the Islamic world and his translation book is known as Kanzul Imaan. You can read the transliteration of Surah which will help you to understand how to read the Arabic text. Apart from that, we have included a Word-By-Word tamil Translation of the Arabic text of Surah .

Surah tamil Tafsir/Tafseer (Commentry)

In Surah we have included two Tafseer (Commentary) in tamil. The first one is from Mufti Ahmad Yaar Khan who was a well-known scholar. In this tafsir, we have also included the most popular Tafsir Ibn-Kathir which is the most comprehensive tafsir available in the world. You can read both or any one of your choice.

Sign up for Newsletter